குஜராத் மாநிலத்தில் உள்ள பனாஸ் பால் உற்பத்தி நிலைய பொறியாளர்கள்,72 மணி நேரத்தில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து சாதனை படைத்துள்ளனர்.
குஜாரத்தில் பால் கூட்டுறவு சங்கத்தின் உதவியுடன் இயங்கி வரும் பனாஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த வாரம் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால்,வெளியிலிருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டது.
இதனையடுத்து பனாஸ் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கர் சவுத்ரி, சொந்தமாக ஆக்சிஜன் தயாரிக்க முடிவு செய்தார்.அதன்படி,பனாஸ் பால் உற்பத்தி நிலையத்தின் அனைத்து பொறியாளர்களும் இணைந்து 72 மணி நேரத்தில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளனர்.
இதுகுறித்து பால் உற்பத்தி நிலையத்தின் மூத்த பொதுமேலாளர் பிபின் படேல் கூறுகையில்,”ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஏர் கம்ப்ரஸர் மற்றும் ஏர் ட்ரையர் போன்ற உபகரணங்கள் தற்போது சந்தைகளில் கிடைக்கவில்லை.மேலும்,மிக அவசரமான காலகட்டத்தில் நாம் இருப்பதால் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவது பற்றி திட்டமிட்டோம்.
அதனால்,பிரஸர் ஸ்விங் தொழில்நுட்பத்தின் மூலமாக ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடிவெடுத்து இந்த புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை 72 மணி நேரத்தில் நிறுவியுள்ளோம்.மேலும்,இந்த நிலையத்தில் இருந்து 93-96 சதவீதம் தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்”,என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…