தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

Published by
மணிகண்டன்

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவான ATS பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 4 பெரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் புகைப்படத்தையும் ATS பிரிவு காவல்துறையினர் வெளியிட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர் குஜராத் காவல் டிஜிபி விகாஷ் ஷாகாய் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை கூறினார்.

அவர் கூறுகையில், கைதானவர்கள் பெயர் முகமது நுஸ்ரத், முகமது நுஃப்ரான், முகமது பாரிஸ், முகமது ரஸ்தீன் என தகவல் கிடைத்தது. இந்த 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள். இவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் (ஐஎஸ்ஐஎஸ்) உறுப்பினர்கள். இவர்கள் நால்வரும் இந்தியாவுக்குள் வந்து பயங்கரவாத தாக்குதல் நடத்த  திட்டமிட்டு இருந்தார்கள்.

இவர்கள் பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இவர்களை பிடிக்க திட்டமிடப்பட்டது. தெற்கிலிருந்து வரும் ரயில்கள் மற்றும் விமானங்களின் பயணிகள் பட்டியல்கள் ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் 4 பேரும் ஒரே PNR எண் மூலம் சென்னையில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்று இண்டிகோ விமானம் மூலம் வருவது பற்றி தகவல் கிடைக்கப்பெற்றது. மேலும், இலங்கையிலும் இதுபற்றி விசாரணை செய்யப்பட்டது.

பிப்ரவரி 2024 முதல், இந்த 4 பேரும் பாகிஸ்தானில் வசிக்கும் ஐஎஸ்ஐஎஸ் தலைவரான அபு என்ற நபருடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த அபு, இவர்களுக்கு கூறியுள்ளான். தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஒப்புக்கொள்ளும் அளவுக்கு தீவிரவாதிகளாக இவர்கள் மாறி இருந்தார்கள். பாகிஸ்தானை சேர்ந்த அபுவும் இவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர்களிடமிருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.  அதில் அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் உடன் தீவிர அங்கத்துவத்தை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன.

அகமதாபாத் அருகே உள்ள நானா சிலோடா பகுதியின் புகைப்படம் மொபைல் போன்களில் இருந்தது. அதில் பயங்கரவாத தாக்குதலை நடத்த வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடம் இருந்தது. குறிப்பிட்ட இடத்தில் இருந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் 20 சுறுசுறுப்பான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. என பல்வேறு தகவல்களை குஜராத் டிஜிபி விகாஷ் ஷாகாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் அரசு பணிகளில் இருந்து 8,144 பேர் ஓய்வு.!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…

31 minutes ago

கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!

திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…

48 minutes ago

ஆசிய தடகள போட்டி – தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா.!

கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…

2 hours ago

கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!

சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…

2 hours ago

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு.? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.!

சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…

2 hours ago

நாளை திமுக பொதுக்குழுக் கூட்டம்.! இன்று மாலை பிரமாண்ட ரோடு ஷோ நடத்தும் மு.க.ஸ்டாலின்.!

மதுரை : ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கடந்த மே3 ம்…

2 hours ago