ஆசிய தடகள போட்டி – தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா.!
தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது நாளான இன்றும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்று அதிர வைத்துள்ளனர். ஆசிய தடகளம் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா சிங் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.
காலில் அணிந்திருந்த SHOE கிழிந்த நிலையில் இருந்தபோதும், தனது விடா முயற்சி மற்றும் திறமையால் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார். இதன்படி, பாபி அலோசியஸுக்குப் பிறகு ஆசிய சாம்பியன்ஷிப்பில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பூஜா சிங் பெற்றுள்ளார்.
18 வயதான பூஜா தனது கடைசி முயற்சியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி, உஸ்பெகிஸ்தானின் சஃபினா சாதுல்லேவாவை (1.86 மீ) முந்திச் சென்றார். மேலும், ஏற்கனவே 10 ஆயிரம் மீட்டர்ல தங்கம் வென்ற குல்வீர் சிங், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். மேலும் அவர், ஹெப்டத்லான் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியிலும் இந்தியாவுக்கு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இவர் 13:24.77 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தாய்லாந்தின் கீரன் டன்டிவேட்டை 13:24.97 வினாடிகளில் பந்தய தூரத்தை நெருங்கி, ஜப்பானின் நாகியா மோரி 13:25.06 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில், இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, 8 தங்கம், 7 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் ஜப்பானை முந்தியுள்ளது. இதுவரை 26 பதக்கங்களை வென்ற சீனா முதல் இடத்தில் உள்ளது.