பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றம் விசாரணை..!

Published by
Edison

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குற்றமற்றவர் என்ற சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிரான வழக்கை வருகின்ற அக்.26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர்.இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்தது.

இதனைத் தொடர்ந்து,குஜராத் குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர்.அதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாப்ரியும் கொல்லப்பட்டார். அதன்பின் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த வன்முறையின் பின்னணியில் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி மற்றும் உயர்அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்ததாக வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

இதனையடுத்து,கலவரம் தொடர்பாக விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், அப்போது முதல்வராக இருந்த மோடி,காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 63 பேர்கள் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை எனத் தெரிவித்தது.

இதனை எதிர்த்து,முன்னதாக ஜக்கியா ஜாப்ரி என்பவரும், சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத் ஆகியோர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இதன்மீதான விசாரணை தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,பிரதமர் மோடி குற்றமற்றவர் என்ற சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிரான வழக்கை வருகின்ற அக்.26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!  

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

10 minutes ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

48 minutes ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

1 hour ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

2 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

4 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

5 hours ago