ஹரியானா மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருகிற நவம்பர் மாதம் நான்காம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது முதல் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருசில மாநிலங்களில் பட்டாசுகளை வெடிப்பதற்கு கால நேரங்கள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் பட்டாசுகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஹரியானாவில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும் டெல்லிக்கு அருகிலுள்ள பிவானி, சர்கி தத்ரி, பரிதாபாத், குருகிராம், ஜஜ்ஜார், ஜிந்த், கர்னல், மகேந்திரகர்க், நுக்,பல்வல், பானிபட், ரேவரி, ரோதக் மற்றும் சோனிபட் ஆகிய 14 மாவட்டங்களில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும் பட்டாசுகளின் விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் டெல்லியில் காற்றின் தரம் மோசமானதை தொடர்ந்து அங்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ஹரியானா மாநிலத்திலும் டெல்லியை ஒட்டியுள்ள இந்த 14 மாவட்டங்களுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளுக்கு கூட பசுமை பட்டாசுகளை தான் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மேம்பட்ட பகுதிகளில் மட்டும் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…