ஹரியானாவில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்த நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பும் பரவத் தொடங்கியது.இதனையடுத்து,கருப்பு பூஞ்சை பாதிப்பால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
அந்த வகையில்,ஹரியானாவில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்வர் மனோகர் லால் கட்டர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுகுறித்து முதல்வர் மனோகர் லால் கட்டர் கூறியதாவது, “ஹரியானாவில் இதுவரை 750 க்கும் மேற்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது,ஐம்பத்தெட்டு பேர் குணமடைந்துள்ளனர்.அதே நேரத்தில்,இதுவரை கருப்பு பூஞ்சை பாதிப்பால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், மருத்துவமனைகளில் 650 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…