ஹரியானாவின் உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆக்சிஜன் அளவு குறைந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அதிக அளவிலான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா தொற்று காரணமாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உயிரிழந்த நிலையில், பலர் இந்த கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகி குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஹரியானாவின் உள்துறை அமைச்சர் அணில் விஜ் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதன் பின் குணமடைந்தார். தற்போதும் அனில் விஜ் அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நாளை அவர் பங்கேற்க இருந்த ஜன்தா தர்பார் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…