supreme court of india. [Image Source : iStock] Credit: anil_shakya19
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோர் மீது மாநில அரசுகள் வழக்கு தொடரலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.
நாட்டில் மக்கள் சமுதாயங்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோர் மீது அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு (எப்ஐஆர்) செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, சமூகங்களுக்கு இடையே பகையை தூண்டும் வகையில் பேசுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்த புகாரும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெறுப்பை விதைக்கும் வகையில் பேசுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய தாமதமானால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும், முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டின் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, எந்த நபர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, நாடு முழுவதும் பல்வேறு வெறுப்பு குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்களை விசாரித்து வந்தபோது இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…