supreme court of india. [Image Source : iStock] Credit: anil_shakya19
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோர் மீது மாநில அரசுகள் வழக்கு தொடரலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.
நாட்டில் மக்கள் சமுதாயங்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோர் மீது அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு (எப்ஐஆர்) செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, சமூகங்களுக்கு இடையே பகையை தூண்டும் வகையில் பேசுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்த புகாரும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெறுப்பை விதைக்கும் வகையில் பேசுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய தாமதமானால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும், முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டின் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, எந்த நபர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, நாடு முழுவதும் பல்வேறு வெறுப்பு குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்களை விசாரித்து வந்தபோது இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…