ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரியங்கா காந்தி அரசுக்கு 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற போது, போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.இதைத்தொடர்ந்து, நேற்று மீண்டும் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஹத்ராஸ் சென்றனர். ஆனால், டெல்லி-நொய்டா சாலையில் இருந்த போலீசார் இவர்களை தடுத்து நிறுத்திய உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி என கூறினர்.
பின்னர், ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உயிரிழந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் சென்றனர்.அங்கு அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள்.இந்நிலையில் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உத்திர பிரதேச அரசுக்கு 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
1.இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலம் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2. ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் மற்றும் எந்த பெரிய பதவியும் வழங்கக்கூடாது.
3. எங்களிடம் கேட்காமல் எங்கள் மகளின் உடல் ஏன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது?
4. நாங்கள் பேசும் வார்த்தை தவறாக மாற்றப்பட்டு , ஏன் மிரட்டப்படுகிறோம் ?
5.இறுதிச்சடங்கிற்கு மலர்மாலை வாங்கினோம், ஆனால் இறந்த உடல் எங்கள் மக்களின் உடலா ? இதை நாங்கள் எப்படி நம்புவது ? என்று பதிவிட்டுள்ளார்.இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிமை இருக்கிறது , உ.பி. அரசு இதற்கான பதில்களைக் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…