எச்சரிக்கை ..! உங்கள் வங்கி கணக்கில் 5 லட்சம் உள்ளதா ? நீங்கள் அதை இழக்க நேரிடும்

Published by
Venu

வங்கி முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான  முதலீட்டுகளில்  ஒன்று வங்கி எஃப்.டி (நிலையான வைப்பு) ஆகும்.

இதை இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிரபலமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்று வங்கி எஃப்.டி.ஆனால் நிபுணர்களின் ஆலோசனையின் படி,வங்கி முதலீட்டாளர்கள் பணத்தை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.

ரூ .5 லட்சத்துக்கு மேல் பெற முடியாது :

அண்மைக்காலமாக சில வங்கிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருகின்றன.ஆகவே ஒரு முதலீட்டாளர் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான தொகையை பெற திட்டமிட்டால்,அத்தகைய முதலீட்டாளர்கள் வங்கிக்கு   நிதி நெருக்கடி ஏற்படும் நிலை ஏற்பட்டால் ரூ .5 லட்சத்துக்கு மேல் பெற முடியாது.ஆம், அவர்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே கிடைக்கும், அதற்கு மேல் கிடைக்க வாய்ப்பு இல்லை.இது குறித்து முதலீட்டு நிபுணர்கள் கூறுகையில், வங்கி வைப்புத்தொகையாளரின் பணத்தில் ரூ.5 லட்சம் வரை மட்டுமே காப்பீடு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

எது சிறந்தது ?

எனவே , இந்திய அஞ்சல் துறையின் முதலீடு மத்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் ,வங்கி நிலையான வைப்புத்தொகைக்கு பதிலாக அஞ்சல் அலுவலக நிலையான வைப்புத்தொகையில் முதலீட்டு செய்ய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மக்கள் விரும்புவது எதை ? முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின் கருத்து :

மும்பையைச் சேர்ந்த  முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின், “வங்கி வைப்பு விஷயத்தில், ஒருவரின் பணம் ரூ .5 லட்சம் வரை பாதுகாக்கப்படுகிறது. இருப்பினும், வங்கி நிதி நெருக்கடி ஏற்படும் ஆகும் பட்சத்தில், வைப்புத்தொகை ரூ .5 லட்சத்திற்கு மேல் பணத்தை பெற முடியாது. பாதுகாப்பை பொருத்தவரை ,அஞ்சல்த்துறையின் எஃப்.டி வங்கி எஃப்.டி.யை விட சிறந்தது. ஆனால் அஞ்சல்த்துறையை விட வங்கிகள் சிறந்த சேவையை வழங்குவதால் மக்கள் வங்கி எஃப்.டி.யை விரும்புகிறார்கள்.

முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி கருத்து :

டெல்லியைச் சேர்ந்த  முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி அஞ்சல் துறை குறித்து கூறுகையில், “சிறு முதலீட்டாளர்களுக்கு, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு நிலையான வைப்பு மிகவும் பிரபலமானது. அத்தகைய முதலீட்டாளர்களுக்கு,பணத்தின்  பாதுகாப்பு என்பது மிக முக்கியம். அதே நேரத்தில், அவர்கள் 1.4 சதவிகித கூடுதல் வருவாயையும் பெறுகிறார்கள்.

எனவே, ஒரு நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள முதலீட்டாளர்களுக்கு, வங்கியின் நிதி நெருக்கடி நிலை குறித்து கவலைப்பட்டால், அஞ்சல்த் துறையின் எஃப்.டி சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு முதலீட்டாளர் 5 வருட வங்கி எஃப்.டி காலத்திற்கு முதலீடு செய்ய நினைத்தால் ,அஞ்சல்த் துறை எஃப்.டி 6.7 சதவீதம் வரை கிடைக்கும். தனியார் மற்றும் பிற பொது வங்கிகளில் இது 5.3 சதவீதம் முதல் 5.35 சதவீதம் வரை கிடைக்கும்.

நன்றி : ஜீ நியூஸ் 

Published by
Venu

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

5 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

5 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

7 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

7 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

9 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

10 hours ago