வங்கி முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முதலீட்டுகளில் ஒன்று வங்கி எஃப்.டி (நிலையான வைப்பு) ஆகும்.
இதை இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிரபலமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்று வங்கி எஃப்.டி.ஆனால் நிபுணர்களின் ஆலோசனையின் படி,வங்கி முதலீட்டாளர்கள் பணத்தை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.
அண்மைக்காலமாக சில வங்கிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருகின்றன.ஆகவே ஒரு முதலீட்டாளர் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான தொகையை பெற திட்டமிட்டால்,அத்தகைய முதலீட்டாளர்கள் வங்கிக்கு நிதி நெருக்கடி ஏற்படும் நிலை ஏற்பட்டால் ரூ .5 லட்சத்துக்கு மேல் பெற முடியாது.ஆம், அவர்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே கிடைக்கும், அதற்கு மேல் கிடைக்க வாய்ப்பு இல்லை.இது குறித்து முதலீட்டு நிபுணர்கள் கூறுகையில், வங்கி வைப்புத்தொகையாளரின் பணத்தில் ரூ.5 லட்சம் வரை மட்டுமே காப்பீடு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளனர்.
எனவே , இந்திய அஞ்சல் துறையின் முதலீடு மத்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் ,வங்கி நிலையான வைப்புத்தொகைக்கு பதிலாக அஞ்சல் அலுவலக நிலையான வைப்புத்தொகையில் முதலீட்டு செய்ய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின், “வங்கி வைப்பு விஷயத்தில், ஒருவரின் பணம் ரூ .5 லட்சம் வரை பாதுகாக்கப்படுகிறது. இருப்பினும், வங்கி நிதி நெருக்கடி ஏற்படும் ஆகும் பட்சத்தில், வைப்புத்தொகை ரூ .5 லட்சத்திற்கு மேல் பணத்தை பெற முடியாது. பாதுகாப்பை பொருத்தவரை ,அஞ்சல்த்துறையின் எஃப்.டி வங்கி எஃப்.டி.யை விட சிறந்தது. ஆனால் அஞ்சல்த்துறையை விட வங்கிகள் சிறந்த சேவையை வழங்குவதால் மக்கள் வங்கி எஃப்.டி.யை விரும்புகிறார்கள்.
டெல்லியைச் சேர்ந்த முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி அஞ்சல் துறை குறித்து கூறுகையில், “சிறு முதலீட்டாளர்களுக்கு, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு நிலையான வைப்பு மிகவும் பிரபலமானது. அத்தகைய முதலீட்டாளர்களுக்கு,பணத்தின் பாதுகாப்பு என்பது மிக முக்கியம். அதே நேரத்தில், அவர்கள் 1.4 சதவிகித கூடுதல் வருவாயையும் பெறுகிறார்கள்.
எனவே, ஒரு நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள முதலீட்டாளர்களுக்கு, வங்கியின் நிதி நெருக்கடி நிலை குறித்து கவலைப்பட்டால், அஞ்சல்த் துறையின் எஃப்.டி சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு முதலீட்டாளர் 5 வருட வங்கி எஃப்.டி காலத்திற்கு முதலீடு செய்ய நினைத்தால் ,அஞ்சல்த் துறை எஃப்.டி 6.7 சதவீதம் வரை கிடைக்கும். தனியார் மற்றும் பிற பொது வங்கிகளில் இது 5.3 சதவீதம் முதல் 5.35 சதவீதம் வரை கிடைக்கும்.
நன்றி : ஜீ நியூஸ்
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…
பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…