கொரோனாவிலிருந்து மீண்டு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனாவிலிருந்து காத்து கொள்ள உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் முயற்சியை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் கொரோனாவிலிருந்து மீண்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தி கொண்டவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘கோவிஷீல்டு தடுப்பூசிகள் மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுடன் டெல்டா மாறுபாட்டின் நடுநிலைப்படுத்தல்’ என்ற தலைப்பில் ஐ.சி.எம்.ஆர். மற்றும் புனேவில் அமைந்துள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா பாதித்து அதிலிருந்து வெளிவந்தவர்கள் இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்களுக்கு கப்பா மற்றும் டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பல்வேறு பிரிவுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் ரத்த மாதிரி மூலமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…