ஜம்மு-காஷ்மீரில் அதிவேக இணைய சேவைக்கான தடையை வரும் ஆகஸ்ட் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .
ஜம்மு காஷ்மீரில் அதிவேக இணைய சேவைக்கான தடை வரும் ஆகஸ்ட் 19 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இதுகுறித்து முதன்மை செயலாளர் இல்லம் வெளியிட்டுள்ள உத்தரவில் பாதுகாப்புப் படையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக திட்டமிடுவதை தவிர்ப்பதற்காக மொபைல் மூலமாக அதிவேக இணைய சேவையை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் அவசியமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ம் தேதி ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். பின்பு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைய உள்ளதால் , வரும் வாரங்களில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அதிவேக இணையத்திற்கான தடை ஆகஸ்ட் 19 வரை நடைமுறையில் இருக்கும், மேலும் மொபைல் தரவுக்கான இணைய சேவை 2 ஜி வேகத்தில் கிடைக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…