அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை உச்ச நீதிமன்றம் அதிரடி

மாநில அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அம்மாநில அரசிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அம்மாநிலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படமால் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முடித்து உள்ளதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரத்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு சார்பில்உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கானது எல். நாகேஸ்வரா ராவ், ஹேமந்த் குப்தா அமர்வு விசாரித்து வருகிறது. அந்த விசாரணையில் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதை அடிப்படை உரிமையாகக் கோர முடியாது என்று அரசியலமைப்பு சட்டமே கூறுகிறது என்ற உத்தரகாண்ட் மாநில அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பதவி உயர்விற்கும் அது பொருந்தும் என தெரிவித்தனர்.மாநில அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025