கர்நாடகாவில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பு! ஐபிஎஸ் அதிகாரியின் அட்டகாசமான செயல்!

Published by
லீனா

கர்நாடகாவில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகிற நிலையில், சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக செல்லும் மக்களிடம், நியமிக்கப்பட்ட கட்டணத்திற்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

கர்நாடகாவில், தனியார் மருத்துவமனைகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுத் தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் மண்டலம் வாரியாக குழுக்களை அமைத்தார். இந்த குழுக்கள் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், பெங்களூர் ஆர்.ஆர் நகர் மண்டலத்தின் கண்காணிப்பு அதிகாரியாக ஐபிஎஸ் ரூபா பணியமர்த்தப்பட்டார். ஆய்வில் விதிகளை பின்பற்றாமல், எஸ்.எஸ்.எம்.என்.சி மருத்துவமனை, நோயாளிகளிடமிருந்து அதிகப் பணம் வசூலித்து வந்ததாக தெரிய வந்த நிலையில், தனியார் மருத்துவமனையின் பதிவீட்டை ஆராய்ந்ததில், 22 கொரோனா நோயாளிகளிடம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சத்து 5 ஆயிரம் வரை அதிகமாக வசூலித்தது தெரியவந்தது.

இதனையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி ரூபா மருத்துவமனை நிர்வாகம் 22 பேரிடம் கூடுதலாக வசூலித்த ரூ.24.80 லட்சம் கட்டணத்தை நோயாளிகளுக்கு திரும்ப பெற்று கொடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Published by
லீனா

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

10 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

10 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

11 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

11 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

12 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

13 hours ago