இந்து மடாதிபதி தற்கொலை : குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது – முதல்வர் யோகி!

Published by
Rebekal

உத்தர பிரதேச மாநிலத்தின் இந்து மடாதிபதி மஹந்த் நரேந்திர கிரி தற்கொலையில், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதியா அகார பரிஷத் மடத்தின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தொடர்பாக கடிதம் ஒன்று சிக்கிய நிலையில், மன அழுத்தம் காரணமாக தான் மடாதிபதி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அக்கடிதத்தின் அடிப்படையில் மடாதிபதியின் சீடர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மடாதிபதி நரேந்திர கிரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்றுள்ளார். அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளரிடம் பேசிய அவர், இந்த சம்பவத்தில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது.

டிஐஜி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் யாரும் இதில் இருந்து தப்பிவிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மடாதிபதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படங்களையும் முதல்வர் யோகி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Recent Posts

சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

சென்னை : இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப…

28 minutes ago

”துணியைக் கட்டி மறைக்கும் பாஜக மாடல் அல்ல” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : நேற்றைய தினம் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. அதற்கு முன் தினமே…

59 minutes ago

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல்! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

3 hours ago

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்கலாம்! தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

5 hours ago

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு – ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

5 hours ago

வானிலை அலர்ட்! பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் கனமழை வெளுக்கும்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,…

7 hours ago