இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 49 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 576 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தாலும், இந்தியாவில் சற்றே குறைந்துகொண்டே செல்கிறது என்று தான் சொல்லியாக வேண்டும். இதுவரை இந்தியாவில் 84,60,885 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 125,605 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 78,18,558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுமுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 49,851 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 576 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 5,16,722 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாறவேண்டுமானால் நாம் கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம், முக கவசம் அணிந்து வெளியில் செல்கையில் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் வழக்கப்படுத்திக்கொள்வோம்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…