கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் கணவரிடம் உயிரணுவை சேகரிக்க அனுமதி கோரி குஜராத் நீதிமன்றத்தில் மனு அளித்த பெண்.
குஜராத்தில் நீதிமன்றத்தில் பெண்ணொருவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு திருமணம் நடைபெற்றதாகவும், கடந்த மே 10-ம் தேதி, தனது கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வதோதராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நுரையீரல் செயலிழந்துள்ள நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம் இல்லாத நிலையில் நீதிமன்ற உத்தரவு தேவை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து குஜராத் நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்த நிலையில், மிகவும் அசாதாரணமான சூழலில், கணவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரது உயிர் அணுவை மருத்துவ முறைப்படி சேகரிக்க அனுமதி அளித்துள்ளது.
ஆனாலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவரின் விந்தணுக்களை சேமித்து பாதுகாக்க முடியுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…