கொரோனாவால் வந்த பிரச்சனை.! இல்லற வாழ்க்கைக்கு தகுதியற்றவர் என்று கூறி பிரிந்த சென்ற பெண் .!

Published by
Ragi

கொரோனா அச்சம் காரணமாக விலகியிருந்த கணவர் தன்னிடமிருந்து உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றுவதாகவும் ,அவர் இல்லற வாழ்க்கைக்கு தகுதியற்றவர் என்றும் கூறி தாய் வீட்டிற்கு பெண் சென்றுள்ளார்.

மத்திய பிரதேசம் போபாலில் கடந்த ஜூன் மாதம் திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் கொரோனா அச்சம் காரணமாக தன்னிடமிருந்து உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றுவதாகவும்,அவர் இல்லற வாழ்வில் தகுதியற்றவர் என்றும் கூறி கணவர் வீட்டிலிருந்து பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கடந்த ஜூன் 29-ம் தேதி கொரோனா ஊரடங்கில் இந்த தம்பதியினரின் திருமணம் நடைபெற்றது . திருமணத்திற்கு பின் அந்த பெண்ணிற்கு கணவரிடமிருந்து உடல் ரீதியான எந்த சந்தோஷமும் கிடைக்கவில்லை என்றும் ,அவர் தன்னிடமிருந்து உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றுவதாகவும் கூறி அந்த பெண் கணவர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் .மேலும் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு கணவர் இல்லற வாழ்க்கைக்கு தகுதியற்றவர் என்று கூறியதுடன் தனது மாமியார் தன்னை துன்புறுத்தியதாகவும் பெண் குற்றம்சாட்டினார்.

அதனையடுத்து கடந்த டிசம்பர் 2-ம் தேதி அந்த பெண் கணவரிடமிருந்து தனக்கு இழப்பீட்டு தொகையை வாங்கி தர கோரி சட்ட உரிமை அமைப்பை அணுகினார்.தனக்கு முன்னோக்கி வாழ்க்கையை நடத்த கணவர் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

அதனையடுத்து சட்ட உரிமை அமைப்பின் அதிகாரிகள் அப்பெண்ணின் கணவரிடம் பேசிய போது ,அவரது திருமணத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ,எனவே அவரும் அறிகுறி எதுவுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகித்ததாகவும் ,அதனாலையே அவர் மனைவியிடமிருந்து விலகி இருந்ததாகவும் கூறியுள்ளார் .மேலும் தனக்கு இல்லற வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும் அதிகாரிகளின் ஆலோசனையின் படி ,அந்த நபர் இல்லற வாழ்வில் தகுதியானவர் என்பதற்கான பரிசோதனை மேற்கொண்ட பின்னர்,அதற்கான ரிசல்ட் வெள்ளிக்கிழமை அன்று சாதகமாக வந்தது .அதன் பின் அந்த பெண்ணிடம் பேசி கணவருடன் திருப்பி அனுப்பி வைத்தனர்.

Published by
Ragi

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

11 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

11 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

12 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

13 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

13 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

13 hours ago