கையில் பட்டாக்கத்தி வைத்தக்கொண்டு தெருவில் பிறந்தநாள் கச்சேரி…9 பேர் அதிரடி கைது!

Published by
Hema

ஹைதராபாதில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தி போன்ற ஆயுதம் வைத்து தெருவில் பாட்டுக்கு நடனம்.

ஹைதராபாதில் 9 இளைஞர்கள் தெருவில் இரங்கி  கொரோனா நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு வழிகாட்டுதல்களை மீறி அவர்களில் இருவரின் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ வைரலானதை அடுத்து போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்த கொண்டாட்டம் ஜூன் 9 அன்று இரவு நகரில் மல்லேபள்ளி அருகே அப்சல்சாகரின் பைலன்களில் நடந்துள்ளது. மேலும் இளைஞர்கள் நள்ளிரவில் அக்கம் பக்கத்திலுள்ள தெருக்களில் வந்து, வாள்களையும் கத்திகளையும் பயன்படுத்தி, கூட்டத்தில் இசைக்கு நடனமாடியதால் அவர்கள் மீது ஹபீப்நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நள்ளிரவு கொண்டாட்டத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதையடுத்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டது. இதையடுத்து ஆயுத தண்டனைச் சட்டத்தின் 25 வது பிரிவு, இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 மற்றும் 269 பிரிவுகளின் கீழ் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் வீடியோவில், ஒரு பெரிய ஃப்ளெக்ஸியன் பின்னணியில் 2 பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்களின் வாழ்த்துக்களுடன், மற்ற இளைஞர்கள் அவர்கள் இருவரையும் தங்களின் தோள்களில் தூக்கி இசைக்கு நடனம் ஆடுவதைக் காணலாம். மேலும் குறைந்தது 6 பேராவது ஒரு வாள் அல்லது கத்தியை கையில் வைத்து ஆடுவதைக் காணலாம்.

இதுகுறித்து ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி எம்.நரேந்தர் கூறுகையில் அந்த 9 இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

Published by
Hema

Recent Posts

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

36 minutes ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

1 hour ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

2 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

2 hours ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

3 hours ago

மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

3 hours ago