Kumarasami ka [Image-HT]
மகாராஷ்டிர அரசியலில் நடந்தது போல் கர்நாடகாவில் யார் அந்த அஜித் பவார் என குமாரசாமி கேள்வி.
மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம் கர்நாடாகாவில் எப்போது நடைபெறும் என தான் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த வாரம் எதிர்க்கட்சித்தலைவர் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆளும் பாஜக-சிவசேனா கூட்டணியில் சில எம்.எல்.ஏக்களுடன் இணைந்தார்.
மேலும் என்சிபி யின் எம்.எல்.ஏக்கள் மற்றும் அஜித்பவார், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில அரசியல் நெருக்கடி அண்டை மாநிலமான கர்நாடகாவில் சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறும்போது, கடந்த வார இறுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய அஜித் பவார், அவரது மாமா சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பலவீனப்படுத்திய பின், கர்நாடகாவில் என்ன நடக்குமோ என்று நான் பயப்படுகிறேன். எதிர்காலத்தில் கர்நாடகாவின் அஜித் பவார் போல் யாரை மாற்றுவார்கள் என்று காத்திருக்கிறோம் என்று குமாரசாமி கூறினார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…