எனக்குள்ளும் காஷ்மீர் மக்களின் பழக்க வழக்கம் மற்றும் சிந்தனை ஓட்டம் உள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பின்னதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இன்று முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள நிலையில், ஸ்ரீநகரில் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்பதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். அப்பொழுது, ஜம்மு காஷ்மீர் பெகாஸஸ் விவகாரம் குறித்து பேச முயற்சித்த போதெல்லாம் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. காஷ்மீர் மீது நேரடியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது, நாட்டின் மற்ற பகுதிகளிலும் மறைமுகமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நீதித்துறை, நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்த உண்மை ஊடகங்களில் கூறப்படுவதில்லை. ஊடகங்கள் தங்கள் பணி பறிக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், உங்களை புரிந்து கொள்ள முடிகிறது. எனது குடும்பமும் காஷ்மீரில் தான் வாழ்ந்தது. எனக்குள்ளும் காஷ்மீரிக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சிந்தனை ஓட்டம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…