சி.ஐ.சி.எஸ்.இ பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த ஐ.சி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக சி.ஐ.எஸ்.சி.இ அறிவித்துள்ளது.
கொரோனா சூழ்நிலையை அடுத்து சி.ஐ.சி.எஸ்.இ பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்புக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில், நாட்டில் கொரோனா தொற்றுநோயின் தற்போதைய மோசமான நிலைமை காரணமாக ஐ.சி.எஸ்.இ (பத்தாம் வகுப்பு) தேர்வு ரத்து செய்ய CISCE முடிவு செய்துள்ளது.
முதலில் மே 5 முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதாக வாரியம் அறிவித்திருந்தது. அதே நேரத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 8 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதைக் கவனித்த கவுன்சில் கடந்த 16-ஆம் தேதி ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் ஐஎஸ்சி 12 ஆம் வகுப்பு தேர்வு தேதிகளை ஒத்திவைத்தது.
தேர்வுகள் நடத்துவது குறித்த இறுதி முடிவு ஜூன் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் சி.ஐ.எஸ்.சி.இ அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்த்தக்கது.
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…