நாடு முழுவதும் ICSE 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து.., CISCE அறிவிப்பு..!

Published by
murugan

சி.ஐ.சி.எஸ்.இ பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த ஐ.சி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக சி.ஐ.எஸ்.சி.இ அறிவித்துள்ளது.

கொரோனா சூழ்நிலையை அடுத்து சி.ஐ.சி.எஸ்.இ பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்புக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில், நாட்டில் கொரோனா தொற்றுநோயின் தற்போதைய மோசமான நிலைமை காரணமாக ஐ.சி.எஸ்.இ (பத்தாம் வகுப்பு) தேர்வு ரத்து செய்ய CISCE முடிவு செய்துள்ளது.

முதலில் மே 5 முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதாக வாரியம் அறிவித்திருந்தது. அதே நேரத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 8 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதைக் கவனித்த கவுன்சில் கடந்த 16-ஆம் தேதி ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் ஐஎஸ்சி 12 ஆம் வகுப்பு தேர்வு தேதிகளை ஒத்திவைத்தது.

தேர்வுகள் நடத்துவது குறித்த இறுதி முடிவு ஜூன் முதல் வாரத்தில் முடிவு  எடுக்கப்படும் என்றும் சி.ஐ.எஸ்.சி.இ அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்த்தக்கது.

Published by
murugan

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

1 hour ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

2 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

3 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago