கொரோனா,கேன்சர் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் நவீன தொழில்நுட்ப முறையை ஐஐடி மெட்ராஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த எம்ஐடி சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மருத்துவ ஆய்வுக்காகவும் கொரோனா,கேன்சர் மற்றும் மூளை நரம்பியல் நோய்களான அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற நோய்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ சிகிச்சை முறை அளிப்பது என்று,ஐஐடி மெட்ராஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த எம்ஐடி விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் விளைவாக,’ஆர்கனாய்டுகள்’ எனப்படும் மனித மூளை திசுக்களை செயற்கையாக வளர்க்கும் “3D பிரிண்டட் இங்குபெஷன் மெஷினை” கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.இதன்மூலமாக,மூளை திசுக்களின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு,கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ ஆய்வு,கேன்சர் மற்றும் மூளை நரம்பியல் நோய்களான அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற நோய்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ சிகிச்சை முறை அளிப்பது என்பதையும் கண்டறிய முடியும்.
பொதுவாக,நீண்ட நாட்கள் மூளையின் திசுக்களை செயற்கையாக வளர்ப்பது சவாலானதாக இருக்கும்.ஏனெனில்,இன்குபேசன் மற்றும் இமேஜிங் முறையில் செல்களை தனியாக பிரித்து ஆராயும்போது அது தவறான முடிவுகளையும் அல்லது அந்த செல்கள் மாசடைய வாய்ப்பும் உள்ளது.ஆனால்,தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய முறையின் மூலம் செல்களை எளிதாகவும்,எந்த தடையும் இன்றியும் வளர்க்க முடியும்.
இதன்மூலம்,முன்கூட்டியே கொரோனா பாதிப்பு மற்றும் கேன்சருக்கான மருந்துகளை எளிதில் கண்டறிய முடியும்.அதனால்,வரும் காலங்களில் இந்த புதிய முறை மருத்துவ உலகில் வரப்பிரசாதமாக கருதப்படும்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…