Categories: இந்தியா

Laxmidhar Behera : இறைச்சி சாப்பிடுவதால் இயற்கை சீற்றம்.? சர்ச்சையை கிளப்பிய ஐஐடி இயக்குனர்.! காங்கிரஸ் கண்டனம்.!

Published by
மணிகண்டன்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேக வெடிப்பு, கனமழை காரணமாக இமாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் பெரும் வெள்ளம், மழையினால் பாதிக்கப்பட்டன. அதுவும் குறிப்பாக இமயமலை அமைந்துள்ள பகுதிகளில் ஒன்றான ஹிமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு, மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம் என இயற்கை சீற்றத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டது.

இத்தகைய இயற்கை சீற்றங்கள் மலைப்பிரதேச பகுதிகளில் வருவது இயல்புதான் என்றாலும் இது குறித்து ஐஐடி மண்டி தலைவர் லஷ்மிதார் பெஹரா (Laxmidhar Behera) மாணவர்கள் மத்தியில் காணொளி வாயிலாக பேசிய கருத்துக்கள் தற்போது மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறிஉள்ளது.

ஐஐடி மண்டி இயக்குனர் லஷ்மிதார் பெஹரா (Laxmidhar Behera) அண்மையில் ஐஐடி மாணவர்கள் மத்தியில் காணொளி காட்சி வழியாக உரையாற்றினார். அப்போது பேசுகையில், பலர் வளர்ப்பு விலங்குகளை கொடூரமாக கொன்று அதன் இறைச்சியை நாம் சாப்பிடுவது சுற்றுச்சூழலை பாதிக்கிறது. இயற்கை சீற்றங்கள் வருவதற்கு இவைதான் காரணமாக அமைகிறது.

இப்படி நாம் விலங்குகளை கொடுமைப்படுத்துவதையும், அதனை கொன்று சாப்பிடுவதையும் நிறுத்துகிறோமோ அப்போது தான் இயற்கை பேரிடரில் இருந்து நாம் தப்ப முடியும். அதனால் மாணவர்கள் நீங்கள் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என அந்த காணொளி காட்சி வாயிலாக ஐஐடி மண்டி இயக்குனர் லஷ்மிதார் பெஹரா கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கள் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது X சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், பிரதமர் மோடி அந்த காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என பேசுகிறார். ஐன்ஸ்டினுக்கும், நியூட்டனுக்கும் ஒரு மத்திய அமைச்சருக்கு வித்தியாசம் தெரியவில்லை. டார்வின் கோட்பாடுகளை பாட புத்தகங்களில் நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், இப்போது ஐஐடி இயக்குனர் ஓர் அபத்தமான கருத்தை தெரிவித்துள்ளார். அவர் அந்த பதவிக்கு பொருத்தம் இல்லாதவர் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

2 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

3 hours ago

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

3 hours ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

4 hours ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

4 hours ago