இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. நீட் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தேர்வுகள் குறித்து அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, நீட் மற்றும் JEE தேர்வுகளை தற்போதைய சூழலில் நடத்துவது குறித்து ஆராய மத்திய அரசு குழு ஒன்றினை அமைத்துள்ளது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று டிவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் மற்றும் JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள வல்லுனர்கள் அடங்கிய குழுவிடம் நாளை (அதாவது இன்று) இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இதனால், நீட் மற்றும் JEE தேர்வுகளை நடத்தவது குறித்து முக்கிய தகவல் இன்று வெளியாக வாய்ப்புள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…