கடந்த ஒரு 7 நாட்களாக அசாமில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை, கொரோனா தொற்றால் இந்தியா முழுவதும், 21,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 681 பேர் உயிரிழந்துள்ளனர். 4,258 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இதில் அசாம் மாநிலத்தில் மட்டும் இதவரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில், 19 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் ஒரு நபர் மட்டும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். கடந்த ஒரு 7 நாட்களாக அசாமில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர், ‘ உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முறை சிறப்பாக உள்ளது. இதுவரை 5,789 பேரின் பரிசோதனை மாதிரிகள்ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 214 பேரின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனவும், மும்பையில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வரும் 25-ஆம் தேதி கவுகாத்தியில் உள்ள மீட்கால் கல்லூரியில் பத்திரிகையாளர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனைகள் செய்யப்படவுள்ள.’ என தெரிவித்தார்.
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…