கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பு: கடந்த ஆண்டுகளை விட அதிகம் – ரிசர்வ் பேங்க் அறிக்கை.!

Published by
பாலா கலியமூர்த்தி

200 ரூபாய் கரன்சியில் 31,969 கள்ளநோட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 150% அதிகரித்துள்ளது என ரிசர்வ் வாங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசால் அமலுக்கு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் பணம் புழக்கத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்திருந்தது. இதற்கான விளக்கத்தையும் தெரிவித்தது. அதாவது, கள்ளநோட்டு பிரச்சனையில் தீர்வு காண்பதற்காக இந்த கரன்சிகளை அறிமுகம் செய்துள்ளோம் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்தும், புதிய கரன்சியிலும் கள்ள நோட்டுகளின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2019-20 ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கரன்சியில் சுமார் 30,054 கள்ளநோட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது கடந்த 2018-19 ஆம் ஆண்டை விட சுமார் 37% அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோல், 200 ரூபாய் கரன்சியில் 31,969 கள்ளநோட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 150% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், வங்கிகளில் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் மட்டுமே ரிசர்வ் வங்கி கள்ளநோட்டுகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை கைப்பற்றிய கள்ள நோட்டுகளில் தகவல்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

5 minutes ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

32 minutes ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

60 minutes ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

2 hours ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

3 hours ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

3 hours ago