இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்னையை, இரு நாடுகளும் சேர்ந்து சுமுகமாக தீர்த்துக் கொள்ளும் என, நம்புவதாகவும் மேலும் தேவைப்பட்டால் அந்த பிரச்சனைகளை தீர்க்க தான் உதவ தயாராக இருப்பதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப், மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பேச்சில், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், மேலும் படைகள் குவிக்கப்படாது என இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களை நேற்று முன் தினம் சந்தித்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா மற்றும் சீனா இடையிலான பிரச்னை, மிகவும் தீவிரமாக உள்ளது. அதை, இரு நாடுகளும், சுமுகமாக தீர்த்துக் கொள்ளும் என நம்புகிறேன். மேலும் ஏதாவது உதவி தேவைப்பட்டால், அதை முழு மனதுடன் செய்ய, நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார். இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், புதிய கப்பல்கள் கட்டும் பணி மற்றும் கடலோர கண்காணிப்பு ஆகியவற்றில், அமெரிக்காவுடன் இணைந்து, இந்தியா ஈடுபட்டு வருவதாகவும், அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…