ஜூன் 1 முதல் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு….விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடி..!

Published by
Hema

இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்த்தப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு !

இந்தியாவில் கொரோனா பரவலானது பல தரப்பட்ட மக்களை பாதித்த நிலையில், இந்திய பொருளாதாரத்தில் பெரும் சரிவினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பரவலால் கடந்த 1 வருடமாக அரசு போக்குவரத்து சேவைகளை ரத்து செய்து வருகிறது.

இதன்மூலம் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க அரசு சரக்கு விமானங்களைத் தவிர்த்து பயணிகளுக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது.

இதன்விளைவாக  இந்திய விமானத்துறை அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்பதால் உள்நாட்டு விமானங்களின் கட்டணத்தை ஜூன் 1 முதல் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி உள்நாட்டு விமான கட்டணத்தை 13 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனால் 40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரம் கொண்ட விமானங்களுக்கான குறைந்த பட்ச கட்டணம் 2,300 ரூபாயிலிருந்து 2,600 ரூபாயாகவும், மேலும் 40 முதல் 60 நிமிடம் வரை பயண நேரம் உள்ள விமானங்களுக்கான குறைந்த பட்ச கட்டணம் 2,900 ரூபாயிலிருந்து 3,300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி பயண நேரத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது, இதையடுத்து கடந்த பிப்ரவரியில் இதன் கட்டணங்கள் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
Hema

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago