இந்தியாவில் 68% கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது – லால் அகர்வால்!

Published by
Rebekal
  • இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 68 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் கூறியுள்ளார்.
  • குணமடைபவர்கள் எண்ணிக்கை 93.1% ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா தொற்று பரவளின் நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் அவர்கள் பேசுகையில், நாட்டில் தினசரி கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு 68 சதவீதம் குறைந்துள்ளதாகவும், மீட்பு விகிதம் 93.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியதாகவும், அதன் பிறகு 68% தற்பொழுது குறைந்துள்ளதாகவும், கடந்த மே 10ஆம் தேதி நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை உச்சத்தில் இருந்ததாகவும், அதன் பின்பாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21 லட்சம் குறைந்து 56 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் உள்ள 377 மாவட்டங்களில் கொரோனாவால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும், தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகி வந்த பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக பாதிப்புகள் குறைந்துள்ளதாகவும், அதே சமயம் 257 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தினசரி பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 37 சதவீதம் பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 43 சதவீதம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 32 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

39 minutes ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

1 hour ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

2 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

2 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

4 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

5 hours ago