இந்தியாவில் 95 நாட்களில் 13 கோடி மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 95 நாட்களில் 13 கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மிக விரைவாக செயல்படும் நாடு இந்தியா என்று மத்திய சுகாதார அமைச்சகம் இதுகுறித்து தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 100 நாட்களில் 13 கோடி தடுப்புசி வழங்கப்பட்டது. அதேபோல் சீனாவில் 109 நாட்களில் போடப்பட்டது. ஆனால் இந்தியாவில் 95 நாட்களில், இதுவரை 13,01,19,310 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…