இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நேற்று ஒரே நாளில் புதியதாக 3,787 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 104 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 4,628,549 பேர் கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 308,645 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகளவில் உள்ளது. இந்தியா குறைவான தாக்கம் கொண்ட நாடாக கருதப்பட்டாலும், தற்பொழுது வரை 85,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்பொழுது வரை 2,752 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 30,153 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள், குணமாகியவர்கள் தவிர்த்து தற்பொழுது 52,773 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் புதியதாக 3,787 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 104 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா ஆரம்பமாகிய சீனாவில் கூட பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82,933 ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,633 ஆகவும் தான் உள்ளது. தற்பொழுது புதியதாக 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றுள்ளது. அத்துடன் இறப்பு ஒன்றுமில்லை.
சீனாவை விட இந்தியா கொரோனா பாதிப்பில் அதிகளவில் உள்ளது. ஆனால் உயிரிழப்பு பாதிக்கு பாதி குறைவாகவே உள்ளது. சீனாவையும் மிஞ்சி கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. எனவே, நாம் பாதுகாப்பாக “தனித்திருப்போம், விழித்திருப்போம், வீட்டிலிருப்போம்”.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…