உலக அளவில் மிகப்பெரிய இராணுவமாக திகழ்வது இந்திய இராணுவம் ஆகும்.இந்த, இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தற்போது இராணுவ தளபதியாக உள்ள பிபின் ராவத், இந்த டிசம்பருடன் ஓய்வு பெறுகிறார். இவரைத் தொடர்ந்து மனோஜ் முகுந்த் தளபதியாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 1-ந் தேதி ராணுவ துணை தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் முகுந்த் நரவனே,,மகாராஷ்டிராவின் புனேவின் பள்ளி படிப்பை முடித்தார். மேலும் இவர்,புனே தேசிய பாதுகாப்பு அகாடமி, டேராடூன் இந்திய ராணுவ அகாடமியிலும் சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பாக முதுகலை பட்டமும் படித்தவர்.இவர் முதன்முதலில், 1980-ம் ஆண்டு 7-வது சீக்கியர் படைப்பிரிவில் இணைந்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…