அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் வரவேற்பு.
நன்கு நாட்களுக்கு அரசு முறை சுற்று பயணமாக நேற்று டெல்லியிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி அங்கு சென்றடைந்தார். வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ருஸ் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்கா அரசு உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் விமான நிலையத்தில் இந்திய தேசிய கொடியுடன் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இப்பயணத்தின் முதல் அலுவலாக துணை அதிபர் கமலா ஹாரிஸ்-ஐ பிரதமர் சந்தித்து பேசவுள்ளார். இதன்பின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்கிறார். சுற்று பயணத்தின் இறுதி கட்டமாக ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
முன்னதாக டெல்லியில் புறப்படும்போது தனது பயணத்தின் நோக்கங்கள் குறித்து பிரதமர் மோடி பதிவிட்டியிருந்தார். அதில், அதிபர் பைடனுடன் பிராந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் குறித்து பேச உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்தோ பசிபிக் பகுதியில் மேற்கொள்ளவுள்ள செயல்பாடுகள் குறித்து குவாட் அமைப்பின் தலைவர்களுடன் பேச உள்ளதாகவும் கூறியிருந்தார். பயங்கரவாதம், கொரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் குறித்து ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டியிருந்தார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…