பெரிய நாடுகளின் விவசாயிகளுக்கு கிடைக்கும் நவீன வசதிகள் இந்திய விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும், இதை இனி தாமதப்படுத்த முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் நலத்திட்ட மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றி வருகிறார்.அப்பொழுது அவர் பேசுகையில்,விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் கொண்டுவந்த சீர்திருத்தங்களை பார்த்து எதிர்க்கட்சிகள் கவலை அடைந்து விட்டன. யாரெல்லாம் விவசாயிகளை புறம் தள்ளினார்களோ அவர்கள் தான் தற்பொழுது இந்த மோசமான அரசியலை செய்து வருகின்றனர்.விவசாயிகளின் தற்கொலைகளை இந்த புதிய வேளாண் சட்டங்கள் தடுக்கும்.
நாங்கள் விவசாயிகளுக்கு உதவி வருகிறோம். எங்களைப் போலவே விவசாயிகளுக்கு உதவி செய்ய எதிர்க்கட்சிகளை எது தடுக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.எதிர்க்கட்சிகளால் வாக்குறுதிகளை மட்டுமே தர முடியும். ஆனால் ஆளும்கட்சி மட்டும்தான் அதை நிறைவேற்றும். இந்தியாவின் விவசாயிகள் இனி பின்தங்கிய நிலையில் வாழ முடியாது. பெரிய நாடுகளின் விவசாயிகளுக்கு கிடைக்கும் நவீன வசதிகள் இந்திய விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும், இதை இனி தாமதப்படுத்த முடியாது என்று பேசியுள்ளார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…