பத்து மாதம் சுமந்த சிசுவின் தலையும், உடலும் துண்டாகி இறந்த அதிர்ச்சி சம்பவம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தெலங்கானா மாநிலத்தில் அரசு மருத்துவரின் கவனக்குறைவால் பிரசவத்தின் போது சிசுவின் தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • மருத்துவரின் கவனக்குறைவால், பத்து மாதம் சுமந்த சிசுவின் தலையும், உடலும் துண்டாகி இறந்த நிகழ்வு உறவினர்களையும், அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த நிறைமாத கர்பிணியான சாவித்திரி என்பவர் பிரசவத்திற்காக அச்சம் பேட்டை மண்டல அரசு மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர், குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்தார். அப்போது குழந்தையின் தலை, அதன் உடலில் இருந்து துண்டாகியுள்ளது. ஆனால், இதை சாவித்ரியின் உறவினர்களிடம் மறைத்த மருத்துவர், தாயின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தார்.

அதை தொடர்ந்து அங்கு அனுமதிக்கப்பட்ட கர்பிணிக்கு பிரசவம் பார்த்த மருதுவர்கள், சிசுவின் உடல் மட்டுமே தாயின் கர்ப்பப்பையில் இருப்பதாகவும், தலை வெட்டப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள், அச்சம் பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவரின் கவனக்குறைவால், பத்து மாதம் சுமந்த சிசுவின் தலையும், உடலும் துண்டாகி இறந்த நிகழ்வு உறவினர்களையும், அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

33 minutes ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

49 minutes ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

3 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

3 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

4 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

5 hours ago