கேரளாவில் சுவாரசிய சம்பவம்.! திருட வந்த இடத்தில் புகைப்படத்தை பார்த்து மனம் மாறிய திருடன் .!

Published by
Dinasuvadu desk
  • கேரளாவில் உள்ள திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் திருடன் இரவு  5 கடைகளில் பணம், நகைகள் கொள்ளையடித்து உள்ளான்.
  • அப்போது ஒருவீட்டில் அந்த திருடன் இது ஒரு ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல் திருட நுழைந்து விட்டேன் என திருடன் சுவற்றில் எழுதி இருந்தார்.

கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு  5 கடைகளில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடப்பட்ட 5 கடைகளையும் ஆய்வு செய்தனர்.அப்போது ஒரு கடைக்கு அருகில் உள்ள வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை போலீசார் பார்த்தனர்.

இந்த வீட்டிலும் திருட்டு நடந்திருக்கலாம் என எண்ணி போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் வீட்டில் இருந்து ஒரு பொருள்கள் கூட திருட்டு போகவில்லை. மேலும் வீட்டின் சுவரில் திருடன் மன்னிப்பு கேட்டு எழுதி இருந்தது தெரியவந்தது.

அந்த சுவற்றில் “இது ஒரு ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல் திருட நுழைந்துவிட்டேன். வீட்டில் இருந்த புகைப்படங்களை வைத்து தான் இது ராணுவ வீரரின் வீடு என எனக்கு  தெரிந்தது. தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே வந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என சுவற்றில் எழுதி இருந்தது.

இந்நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆச்சர்யத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

Published by
Dinasuvadu desk
Tags: #Keralathief

Recent Posts

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 minute ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

26 minutes ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

54 minutes ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

3 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago