விவசாயிகள் விரும்பாத புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டியதுதானே? பிரியங்கா காந்தி!

Published by
Rebekal

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்க்கும் பட்சத்தில் மத்திய அரசு அந்த புதிய சட்டங்களை திரும்பப் பெற வேண்டியது தானே என பிரியங்கா காந்தி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் வேளாண் திட்டங்கள் மூலமாக நன்மை அடைவார்கள் என மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தாலும், விவசாயிகள் அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் எனும் ஒற்றை கோரிக்கையை வைத்து இன்னும் போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி அவர்கள் இது குறித்து பேசுகையில், விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 80 நாட்களாக போராடி வருகிறார்கள். கோடை காலமும் தற்பொழுது தொடங்கிவிட்டது, இருந்தாலும் அவர்கள் போராட்டம் செய்து கொண்டே இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு வேளாண் சட்டம் நன்மை பயக்கும் என பிரதமர் கூறினாலும், விவசாயிகள் இந்த சட்டம் வேண்டாம் என்று தானே கூறுகிறார்கள், அவர்களே வேண்டாம் என்று கூறும் பொழுது ஏன் அதை திரும்பப் பெற மறுக்கிறீர்கள் என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…

3 minutes ago

சலுகைகள் இல்லைனா தென்னாப்பிரிக்காவுக்கே போயிருப்பார்…மஸ்கை கிண்டல் செய்த ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…

4 minutes ago

சொல்லியும் கேட்காத சின்னச்சாமி நிர்வாகம்…மைதானத்தின் Fuseஐ பிடுங்கிய EB!

பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…

58 minutes ago

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

2 hours ago

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…

3 hours ago

காசா கடற்கரை உணவகத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை வான்வழி தாக்குதல்…22 பேர் பலி!

காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…

3 hours ago