கடந்த சில மாதங்களுக்கு முன் சீனா தொடர்பான பல மொபைல் செயலிக்கு மத்திய அரசு தடை செய்தது இது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், பல மொபைல் செயலி தடை செய்த போதிலும், சிலர் இன்னும் தடைசெய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில் தடைசெய்யப்பட்ட மொபைல் செயலிப் பயன்படுத்துவதில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தடைசெய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துவது தொடர்பாக ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பிரிவு 69 ஏ இன் கீழ் மொபைல் ஆப் நிறுவனங்கள் மட்டுமே அரசு விதித்த தடை பின்பற்றாததற்காக அபராதம் விதிக்கப்படும். தடைசெய்யப்பட்ட மொபைல் செயலிகளான PUBG, TikTok மற்றும் UC Browser போன்றவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தனிப்பட்ட அபராதம் அல்லது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று கூறியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு தடைசெய்யப்பட்ட சீன செயலி பயனர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15 அன்று இந்தோ-சீனா எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சீன செயலிகளை தடை செய்ய மத்திய அரசு தொடங்கியது.
அதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகமாகவே ஏற்பட்டது.தற்போது அந்த பதட்டம் குறைந்துள்ளது. இதுவரை, 200-க்கும் சீன செயலிகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…