ISRO Scientists ch-3 [Image-Twitter/@sunnews]
நாளை சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதை முன்னிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலில் தரிசனம்.
சந்திராயன்-3 விண்கலம் நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இஸ்ரோ மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. நிலவின் தென்துருவத்திற்கு அனுப்பப்படவுள்ள இந்த சந்திராயன்-3 விண்கலம் சுமார் 615 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3900 கிலோ எடை கொண்ட சந்திராயன்-3 விண்கலம் நாளை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதிகட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், நாளை செலுத்தப்பட உள்ள சந்திராயன்-3 விண்கலம் வெற்றியடைய வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சந்திராயன்-3 விண்கலத்தின் மாதிரியை சாமி சன்னதியில் வைத்து, இந்த ஏவுதல் வெற்றியடைய வேண்டி வழிபாடு செய்துள்ளனர். இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் நிலவில் விண்கலம் தரையிறக்கும் 4-வது நாடு நமது இந்தியா ஆகும். ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…