தமிழக முதலமைச்சர் மற்ற தலைவர்களை விமர்சிக்காமல் இருப்பது நல்லது-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், அதிமுக அரசு எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது . தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும் என்றும் பேசினார்.
சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்தார். அவர் கூறுகையில்,அவர் எத்தனை ஆண்டுகாலம் மத்திய அமைச்சர் பதவியில் இருந்தார்.அவரால் இந்த நாட்டுக்கு என்ன பயன்?பூமிக்குத்தான் பாரம்.அவர் என்ன திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தினார்.மேலும் அவருக்கு சுயநலம் தான் முக்கியம் ,நாடு நலம் முக்கியம் அல்ல என்று தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சரின் கருத்துக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளளார்.அவர் கூறுகையில், ப.சிதம்பரம் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியும், தமிழக முதலமைச்சர் மற்ற தலைவர்களை விமர்சிக்காமல் இருப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
June 21, 2025
அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!
June 20, 2025