தமிழக முதலமைச்சர் மற்ற தலைவர்களை விமர்சிக்காமல் இருப்பது நல்லது-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், அதிமுக அரசு எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது . தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும் என்றும் பேசினார்.
சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்தார். அவர் கூறுகையில்,அவர் எத்தனை ஆண்டுகாலம் மத்திய அமைச்சர் பதவியில் இருந்தார்.அவரால் இந்த நாட்டுக்கு என்ன பயன்?பூமிக்குத்தான் பாரம்.அவர் என்ன திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தினார்.மேலும் அவருக்கு சுயநலம் தான் முக்கியம் ,நாடு நலம் முக்கியம் அல்ல என்று தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சரின் கருத்துக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளளார்.அவர் கூறுகையில், ப.சிதம்பரம் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியும், தமிழக முதலமைச்சர் மற்ற தலைவர்களை விமர்சிக்காமல் இருப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025