Sunil Chhetri [Image source: file image ]
மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கூறியுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்திய மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், நேற்று புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
போலீசார் வைத்திருந்த தடுப்புகளைத் தாண்டி, மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி செல்ல முயன்றபோது மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின், மல்யுத்த வீரர் சக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உட்பட மல்யுத்த வீரர்கள் சிலரை போலீசார் பலவந்தமாக கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இதற்கு பல கட்சித்தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதைக் குறித்து விவாதித்த இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, நம் நாட்டிற்காக பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது ஏன்.? இது யாரையும் நடத்துவதற்கான முறை இதுவல்ல என்று ட்வீட் செய்துள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…