ஜபால்பூர் பெண்ணின் பிடிவாதம்! 28 ஆண்டுகால விரதம் முடிவுக்கு வந்தது!

Published by
லீனா

ஜபால்பூர் பெண்ணின் 28 ஆண்டுகால விரதம் முடிவுக்கு வந்தது.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் விஜய் நகர் பகுதியில் வசித்து வருபவர், ஊர்மிளா சதுர்வேதி.  1992-ம் ஆண்டு,  அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டமைப்பு வீழ்த்தப்பட்டு, நாட்டில் கலவரம் ஏற்பட்டது. அப்போது, இந்த பெண் ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கும் வரை, நான் பாலும், பழமும் தான் சாப்பிடுவேன் என சபதம் விடுத்திருந்தார்.

அதன் பின் இவர், ராமாயணத்தை ஓதுவதற்கும், பிரார்த்தனை செய்வதற்கும் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், கோயிலுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதையடுத்து, தீர்ப்பை அறிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வாழ்த்தி அவர் கடிதங்களை அனுப்பினார்.

இவர், இந்த உண்ணாவிரதத்தை தொடங்கிய போது அவருக்கு வயது 52. அவரது உறவினர்கள் இந்த உண்ணாவிரதத்தை முறிக்கும்படி பல முறை கேட்டுக் கொண்ட போதும், அவர் அதை முடிக்காமல் பிடிவாதமாக இருந்து வந்தார்.

தற்போது இதுகுறித்து அவர் கூறுகையில், 28 வருட உண்ணாவிரதத்திற்கு பிறகு பகவான் ராமரின் ஆசீர்வாதங்களை பெற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், ராமரிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னரே அயோத்தி சென்று உணவு எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை அயோத்திக்கு அழைத்துச் செல்லவும், விரைவில் சரயு ஆற்றின் கரையில் விரதத்தை முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்காக ஆகஸ்ட் 5 ஆம் தேதியை ராம் ஜன்ம பூமி அறக்கட்டளை இறுதி செய்துள்ள நிலையில், இந்த நிகழ்வில் அவர் கலந்து கொள்ளலாம் என இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இவரது திட்டம் சீர்குலைந்தது.

Published by
லீனா

Recent Posts

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

24 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

1 hour ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

1 hour ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago

போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்த‌த்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!

அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…

2 hours ago