இன்று நாடு முழுவதும் 660 மையங்களில்ஜேஇஇ தேர்வு நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பினர் மற்றும் அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். மேலும், மாணவர்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், மத்திய அரசு தேர்வுகள் குறிப்பிட்ட நாள்களில் கண்டிப்பாக நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜேஇஇ முதல்நிலை தேர்வு இன்று முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில் 9,53,473 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதில், தமிழகத்தில் 34 மையங்களில் 53,765 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். கொரோனா காரணமாக தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தேர்வு எழுதும் மாணவர்கள் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுகிறது. சமூக இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…