காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிந்தியா, தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டதற்கு ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். ஆனால் என்னால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்றும் இதற்கு அக்கட்சிதான் காரணம் என்று குறிப்பிட்டார்.
இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி முன்பு இருந்ததுபோல் இல்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் என் வாழ்க்கையில் 2 திருப்புமுனை நடந்துள்ளது. அதில் ஒன்று எனது தந்தை மரணம், மற்றோன்று தற்போது பாஜகவில் இணைந்தது என தெரிவித்தார். இதுகுறித்து மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் கூறுகையில், பாஜகவிற்கு இது மகிழ்ச்சியான நாள் என்றும் தற்போது பாஜக குடும்பத்தில் உறுப்பினர் ஆகியுள்ளார் எனவும் தெரிவித்தார். ஒட்டுமொத்த சிந்தியா குடும்பமும் பாஜகவில் தான் உள்ளது என்றும் அரசியல் என்பது மக்களுக்கு நல்லது செய்யத்தான் என குறிப்பிட்டார்.
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…