போதைப்பொருள் தொடர்பாக நடிகை ராகினி திவேதியின் வீட்டிற்கே சென்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி போதை பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில் பெங்களூரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட பலவகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த துணை நடிகை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அரசியல் அதிகாரி ரவிசங்கர் என்பவர் நடிகர், நடிகைகளுக்கும் போதை பொருள் தரகராக வேலை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் போதைப்பொருட்களை பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவிசங்கரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த சமயம் நடிகை ராகினி திவேதி இந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நடிகை ராகினி திவேதிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியும், அவர் நேரில் ஆஜராகவில்லை. இந்த நிலையில், ராகினி திவேதியின் வீட்டிற்கே சென்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராகினி திவேதியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…