விஸ்ட்ரான் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை ஊழியர்கள் அடித்து நொறுக்கிய நிலையில் ,சம்பள விவகாரத்திற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளது.
தைவான் நாட்டின் விஸ்ட்ரான் நிறுவனம் கர்நாடகா மாநிலத்தில் கோலாா் மாவட்டத்தில் உள்ள நரசாபுரா தொழிற்பேட்டையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் செல்போன்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த நிறுவனத்தில் 5000 -க்கும் மேற்பட்டோர் ஊழியர்கள் வருவதாகக் கூறப்படுகிறது.இந்த 5000 பேரில் , 2000 பேர் ஒப்பந்தப் ஊழியர்கள் ஆவார்கள்.ஆனால் ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.ஆகவே இது குறித்து விஸ்ட்ரான் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது.அந்த சமயத்தில் ஊழியர்கள் தொழிற்சாலையை அடித்து நொறுக்கினார்கள். மேலும் அங்கிருந்த கணினிகள், மடிக் கணினிகள் ,வாகனங்கள் என அனைத்தையும் உடைத்து நொறுக்கினார்கள்.இது குறித்து போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதன் பின்பு விஸ்ட்ரான் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,சம்பள விவகாரத்திற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளது.மேலும் விஸ்ட்ரான் இன்ஃபோகாம் உற்பத்தி இந்தியாவின் துணைத் தலைவர் வின்சென்ட் லீவை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்பதை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…