கர்நாடக சட்டசபை தேர்தல்: பெங்களூருவில் இரண்டு நாள் பிரதமர் மோடி மெகா சாலைப்பேரணி.!

Published by
Muthu Kumar

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் மெகா சாலைப் பேரணியை பிரதமர் மோடி இன்று பெங்களுருவில் நடத்துகிறார்.

கர்நாடக சட்டப்பேரவைதேர்தல் நெருங்கிவரும் வேளையில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பாஜகவும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என காங்கிரசும் பலத்த போட்டியில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மே 10-ம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறுதிக்கட்டப் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, இன்று மற்றும் நாளை பெங்களுருவில் மெகா சாலைப்பேரணியை நடத்துகிறார்.

கிட்டத்தட்ட 13 தொகுதிகளை உள்ளடக்கிய 26 கி.மீட்டர் தூரம் கொண்ட சாலைப்பேரணியில் பிரதமர் மோடி இன்று, சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் நிற்க அவர்களை நோக்கி கையசைத்த படி சென்றார். முன்னதாக ஒரே நாள் திட்டமிடப்பட்டிருந்த இந்த சாலைப்பேரணி, தற்போது மக்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் நாளை (மே 7 ஆம் தேதி), பிரதமர் மோடி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நான்கு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார், முன்னதாக பிரதமர் மோடியின் ஏப்ரல் 30-ம் தேதி மைசூரில் நடந்த சாலைப்பேரணியிலும் ஏராளமானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

30 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

56 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

1 hour ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago