தேசிய கீதத்தை பாடி போராட்டத்தை கலைத்த கர்நாடக காவல்துறை.!

Published by
பாலா கலியமூர்த்தி

சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்- தேசிய கீதத்தை பாடி போராட்டத்தை கலைத்த காவல்துறை.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல முடியாமல் சிக்கி தவித்தனர். இந்த நிலையில், 3 ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் தொழிளாலார்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு அனுமதித்தது. 

இதனிடையே ஊரடங்கு தளர்வால் தற்போது தொழிற்சாலைகள், கட்டிடப் பணிகளை தொடரவும் கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த பணிகளில் பெரும்பாலானோர் வெளிமாநில தொழிலாளர்கள் தான் ஈடுபட்டு வந்தனர். இதனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினால் மாநில பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும் பின்னடைவை சந்திக்கும் என்று கர்நாடக அரசு கருதியது. இதன் காரணமாக தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்த ரயில்களை இயக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. 

இதன் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் பெங்களூருவில் தாங்கள் தங்கியிருந்த இடங்களில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதுபோல் பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே உள்ள தொழிற்பேட்டையில் பீகாரை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமாதானம் படுத்தினர். பின்னர் சில தொழிலாளர்கள் எங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்கள் என கோஷங்களை எழுப்பி, தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. 

இதனை கட்டுப்படுத்த இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா, போலீஸ் வாகன ஒலிபெருக்கி மூலம் தேசிய கீதத்தை பாடினார். உடனே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் தேசிய கீதம் பாடி முடிக்கும் வரை அசையாமல் அதே இடத்தில் நின்றனர். பின்னர் இதுகுறித்து ஆட்சியருடன் கலந்து பேசி விரைவில் உரிய முடிவு எடுப்பதாக தெரிவித்து, தொழிலாளர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

7 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

8 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

9 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

10 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

11 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

12 hours ago