ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தை சீனா ஐநா சபையில் எழுப்பி மூக்கு உடைந்த விவகாரம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், இதுகுறித்து இந்தியாவின் நீண்டகால நண்பனான ரஷ்யா தனது நிலைப்பாடை தெளிவாக முன்வைத்துள்ளது. இதில், காஷ்மீர் விவகாரம் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உள்நாட்டு பிரச்னை, அதில், ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என, இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் நிகோலே குடாஷெவ் தெரிவித்தார்.இது குறித்து, இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் நிகோலே குடாஷெவ் தெரிவித்ததாவது, ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை மீது சந்தேகம் உள்ளவர்கள், அங்கு நேரடியாகச் சென்று பார்த்துக் கொள்ளட்டும்.
காஷ்மீர் விவகாரத்தில், ரஷ்யாவை பொறுத்தவரை இந்தியா மீது எந்த சந்தேகமும் இல்லை. இது முற்றிலுமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உள்நாட்டு பிரச்னை. இதை, அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூறிய அவர், ரஷ்யாவில், வரும் மார்ச் மாதம் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெறும் ரஷ்யா – இந்தியா – சீனா முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவுக்கு வருகிறார் என்று கூறினார். சீனாவின் பல்வேறு குடைச்சல்களுக்கு இடையில் நம் நீண்ட நாள் நண்பனான ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது … ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…